போதையில் அவமானப்படுத்தியதால் .தமிழர் ஒருவரை கொன்று கிணற்றில் வீசிய வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில், வழக்கறிஞர் கலீல் என்பவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில், மாடு, ஆடு, கோழி பண்ணை அமைத்து விவசாயம் செயது வருகிறார்.
இந்தப் பண்ணையில். திருப்பத்தூரைச் சேர்ந்த அஷ்கர் பாஷா என்பவர் தனியாக வசித்து பராமரிப்பு செய்து வந்த நிலையில் , தனக்கு உதவியாக . உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை அழைத்து வந்து பணியில் அமர்ந்திருந்தார்
பண்ணையில் இருந்தவாரே அஷ்கர் பாஷா, தினமும் தனது தாய் மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 14-ந்ததேதி முதல் அஷ்கர் பாஷா, அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளாத நிலையில், சந்தேகமடைந்த . அஷ்கர் பாஷா பணியாற்றும் நிலத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.
அப்போது, அங்கு அஷ்கர் பாஷா மற்றும் அவரது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம் அவருடன் பணியாற்றி வந்த 2 வடமாநில இளைஞர்களும் காணாமல் போனதை அறிந்தவர்கள் 17-ந்ததேதி உமராபாத் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில். அஷ்கர் பாஷா பணியாற்றி வந்த அதே நிலத்திலுள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்துள்ளதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர், கிணற்றில் சடலமாகக் கிடந்த அஷ்கர் பாஷாவின் உடலை மீட்டெடுத்தனர்

கொலை செய்யப்பட்ட அஷ்கர்பாஷா
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார், அஷ்கர் பாஷா முகத்தில் பலத்த காயங்கள் இருப்பதை கண்டறிந்ததால் . அஷ்கர் பாஷாவை வடமாநில இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்
அதனைத்தொடர்ந்து தப்பி ஓடிய வடமாநில இளைஞர்களை பிடிக்க திருப்பத்தூர் எஸ்பி சியாமளா தேவி தலைமையான தனிப்படையினர் . உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்ட “அனில் குமார் * மற்றும் “அங்கீத்’ ஆகிய இருவரை கைது செய்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலையாளி அணில் குமார்
அஷ்கர் பாஷா மது போதையில் தொடர்ந்து அவர்களை தரக்குறைவாக பேசி வந்ததாகவும், சம்பளம் சரிவர கொடுக்கவில்லை எனவும், சம்பவத்தன்று அணில் குமார் சமைத்து பரிமாறிய உணவை அஷ்கர்பாஷா காலால் எட்டி உதைத்தார் . இவ்வாறு அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர்கள் இருவரும் அஷ்கர் பாஷாவின் கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசிவிட்டு அஸ்கர் பாஷாவின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு ஓசூர் வரை சென்றதாகவும் அங்கிருந்து பெங்களூர் சென்று. ரயில் மூலம் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு தப்பி ஓடியதாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்கள்
இதனைத்தொடர்ந்து, இருவர் மீதும் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து. ஆம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி . அணில் குமாரை வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவன் அங்கித்தை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
– மகேஸ்வரன்
