சங்கத்தை காப்பாத்துங்க கலெக்டரிடம் கதறல் ….!
கொள்ளை அடித்தற்காக பைன் கட்டிவிட்டு. மீண்டும் கொள்ளை அடித்த கூட்டுறவு செயளாலர் மோகனிடம் இருந்து பால் வங்கியை காப்பாத்துங்க என பால் முகவர்கள் மூன்று ஆண்டுகளாக கதறும் சத்தம் அந்த துறை அதிகாரிகளுக்கு கேட்காமல் இருக்கும் ரகசியம் தான் தெரியவில்லை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த. “காவேரிப்பட்டு பகுதியில் கடந்த 20 வருடங்களாக பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது இந்த கூட்டுறவு சங்கத்தில் 2019 மற்றும் 2023 தலைவர்கள் செயலாளர்கள் முறைகேடு செய்ததால், அவர்கள் நீக்கப்பட்டனர் . அதன்பிறகு மாவட்ட துணை பதிவாளர் ( வேலூர்) கீழ் , செகரட்டரி பார்வையில் இயங்கி வருகிறது
இந்த நிலையில் மீண்டும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் . இந்த சங்கம் 2022 ஆண்டு வரை. சுமார் 8 லட்சத்து 17 ஆயிரத்து 709. ரூபாய் லாபத்தில் இயங்கி வந்தது . ஆனால் செயலாளர் மோகன் மீண்டும் பொறுப்பேற்றப் பிறகு 2023 மற்றும் 2025 வரை . மட்டுமே 17 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதாக ஆர்டிஐயில் அம்பலமானதையடுத்து
கொதிப்படைந்த காவேரிபட்டு பால் முகவர்கள் கலெக்டர் முதல் . பால் வளத்துறை அமைச்சர் வரை புகார் அனுப்பி பார்த்தனர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
கடந்த 8-ந்ததேதி நடந்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பால் முகவர்கள் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளார்கள்
அந்த புகாரில்..
37 ஆண்டுகளாக காவேரிபட்டு கூட்டுறவு சங்கம் பால் சங்கத்திற்கு வருகிறோம். எங்களுக்கு வருடம் தோறும் . போனஸ் மற்றும் ஆண்டின் டிசம்பர் மாதம் கடைசியில் ஒரு லிட்டருக்கு 30 பைசா வீதம் கணக்கீடு செய்து ஊக்கத்தொகை வழங்குவது வழக்கமான ஒன்று
ஆனால் 2022 .முதல் 2025 வரை , சங்கத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக காரணம் காட்டி ஊக்கத்தொகை மற்றும் ஆண்டுக்கான போனஸ் தொகை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்
ஆரம்பம் முதல் 2022 வரை லாபத்தில் போய்க் கொண்டிருந்த இந்த பால் கூட்டுறவு சங்கம் . 3 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்
கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தை ஈட்டிவந்த இந்த சங்கம் . திவால் ஆனது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் காவேரிப்பட்டு பால் சொசைட்டியை காப்பாற்ற வேண்டும்.
2023 முதல் 2025 வரை மூன்று ஆண்டிற்கான அனைத்து நிலுவை தொகையை கொள்ளை அடித்தவர்களிடம் பெற்று தரவேண்டும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து உதவியாளர் விஜயகுமாரிடம் பேசும்போது
ஆமாங்க மோகன் என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதை கண்டும் காணாமல் இருக்க என்னால் முடியல அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்
சில மாதங்களாக பணியில் சேர்க்காமல் கோபு மற்றும் மோகன் அலைக்கழித்தார்கள்
அதனைத்தொடர்ந்து. இந்த சங்கத்தின் ஆட்களை புதிதாக மாற்றக் கோரியும் . உதவியாளரான என்னை உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கக் கோரி இந்த சங்கத்தின் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு ஆதரவு அளித்ததால் பணியில் தொடர்கிறேன் என்றார்
ஆர்டிஐயில் தகவல் பெற்ற ஆனந்தன் கூறுகையில்
ஏற்கனவே, காவேரிப்பட்டுப் பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த கோபு. செயலாளர் மோகன் ஆகியோர் பால் கேன்கள் வாங்கிய கணக்கில் 42,000 ரூபாயையும், உள்ளூரில் பால் விற்பனை செய்யப்பட்ட தொகையிலிருந்து மூன்று லட்சம் ரூபாயையும் கையாடல் செய்துவிட்டதாக அப்போது ஏகப்பட்டப் புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் விசாரணையைத் தொடங்கி அதிகாரிகள் முறைக்கேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கோபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார் .
கோபுவின் முறைக்கேடுகளுக்கு சங்கச் செயலாளராக இருக்கும் இதே மோகன் உடந்தையாக இருந்ததாகப் பால் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து புகார் கூறப்பட்டதால், கூட்டுறவு சரக முதுநிலை ஆய்வாளர் விசாரணையில் இறங்கினர்
2019 -ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய ஊக்கத்தொகை மற்றும் கறவைப்பசு கடனுக்கான தவணைத் தொகை ஆகியவற்றிலும் கையாடல் நடந்திருப்பதை கண்டுபிடித்தனர்
அதனைத் தொடர்ந்து, காவேரிப்பட்டுப் பால் கூட்டுறவுச் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளும் தனி அலுவலர் மூலம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில், 1,50 லட்சம் ரூபாயை முறைகேடாக சுருட்டியது தெரியவந்ததால், பால் கூட்டுறவுச் சங்க செயலாளர் மோகனும், அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
அதனைத் தொடர்ந்து . 23 /4/ 2021 ல் . அன்றைய , மாவட்ட (வேலூர்) துணை பதிவாளர் தயவில் . தண்ட தீர்வு என்ற பெயரில் ரூ 52640 கட்டிவிட்டு , இதே சங்கத்தில் சங்க செயலாளர் பொறுப்பில் மீண்டும் மோகன் பணியில் அமர்த்தப்பட்டார், இவரோடு , கோபு தலைவராகவும் , 9.இயக்குனர்களோடு . பொருப்பு செயலாளர் ஆஞ்சி ஆகியோர் நிர்வாகத்தை நடத்தி வந்தனர்
தலைவர் கோபு மற்றும் செயலாளர் மோகனும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக. உதவியாளர் விஜயகுமார். அரசுக்கும் பொதுமக்களுக்கும் அம்பலப்படுத்தியதால் , ஆத்திரமடைந்த விஜயக்குமாரை அப்போது பணியிடை நீக்கம் செய்துள்ளார் மோகன்
இருப்பினும் மாவட்ட நிர்வாகத்திடம் நடந்தவற்றை கூறி விஜயகுமார் உத்தரவு பெற்று மீண்டும் உதவியாளர் பணியில் இருந்து வருகிறார்
ஆர்டிஐயிடம் பதில் கேட்டிருந்ததை
ஒன்றிய பால் உற்பத்தி அலுவலகம் மூலம் தெரிந்து கொண்ட .மோகன் இந்த விஷயத்தினை பெரிதுபடுத்த வேண்டாம் தணிக்கையாளர் உதவியோடு கணக்கை சரி செய்வதாக எண்ணிடம் கெஞ்சினார் . பணத்தை சுருட்டாதவர் ஏன் பதற்றப்பட வேண்டும் இவர்களை சும்மா விட கூடாது. 2019 ல் புகாரில் மோகனை கைது செய்து இருக்க வேண்டும் அல்லது பதவியிறக்கமாவது செய்து இருக்க வேண்டும் . சம்பிரதாயத்துக்கா தண்ட தீர்வு கட்டவைத்து மீண்டும் அதே செயலாளர் பதவியில் அமர்த்தப்பட்டார் அதன் விளைவுதான் அதே கைவரிசையை காட்டி இருக்கிறார் என்றார்
புகார் குறித்து மோகனிடம் பேசினோம்
நான் பணம் எல்லாம் கொள்ளை அடிக்கலிங்க பால் கொள்முதல் செய்வதில் சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம் அதனால் நஷ்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறது. 2021 பால் கேன்கள் விவகாரத்தில் நான் தண்ட தீர்வு கட்டியது உண்மைதான் . இந்த இரண்டு ஆண்டுகள் தான் நஷ்டத்தில் சங்கம் தள்ளாடுகிறது . புகார் குறித்து இனிமேதான் அதிகாரிகள் வந்து விசாரிப்பார்கள் அப்போது அவர்களிடம் காரணத்தை சொல்வேன் என்றார் கூலாக
மாவட்ட பதிவாளர் சித்ரா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு
நான் சமீபத்தில் பணி மாறுதலில் வந்தேன் நீங்கள் குறிப்பிடும் காவேரிபட்டு சங்கம் மீது புகார் வந்துள்ளது . கண்டிப்பாக பால் முகவர்களுக்குண்டான ஊக்கத்தொகை போனஸ் தொகை வழங்காமல் இருக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுபேன் . செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்ததால் சட்டப்படி நடவடிக்கை உண்டு என்றார்
கடந்த மூன்று ஆண்டுகளாக ஊக்கத்தொகை மற்றும் போனஸ் வழங்காமல் நஷ்டத்தை காரணம் காட்டி பால் முகவர்களை காவேரிப்பட்டு பால் கூட்டுறவு சங்கம் ஏமாற்றுவது முறையல்ல . அவர்கள் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து கையாடலில் ஈடுபட்டு வரும் செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
- மணிகண்டன்
