மும்பைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சில பொருட்கள் தபால் மூலம் கடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அது போன்று வந்த பார்சல்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதில் ஒரு பார்சலில் மூலிகை தேயிலை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சந்தேகம் அடைந்த சுங்க வரித்துறை அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதில் பச்சை இலை இருந்தது. அதனை சோதித்து பார்த்தபோது அது கஞ்சா என்று தெரியவந்தது.
