
ட்ரம்பை வெறியேற்றும் புடின்..! போலந்தை தாக்கிய ரஷ்யாவின் ட்ரோன்..! வெடிக்கும் 3-ம் உலகப் போர்..!
உக்ரைனுடனான போருக்கு மத்தியில், ரஷ்ய ராணுவம் போலந்தின் மீது 19 ட்ரோன்களை ஏவியதாகவும் போலந்து இராணுவம் ரஷ்யாவின் 4 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாகக் கூறியுள்ளது. போலந்து நேட்டோவின் உறுப்பு நாடு. நேட்டோ விதிகளின்படி, ஒரு நாடு அதன் நட்பு நாடுகளில் ஒன்றைத் தாக்கினால், அது அனைத்து நட்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இந்நிலையில், ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் மூன்றாம் உலகப் போரை தூண்டுவதாகக் கருதப்படுகிறது. இப்போது அனைவரும் எத்ரிபார்ப்பும் நேட்டோவின் முக்கியமான நாடான அமெரிக்கா என்ன செய்யப்போகிறது என எதிர்பார்க்கின்றனர்.
இன்று நேட்டோ நாடான போலந்தில் ஒரு ரஷ்ய ட்ரோன் காணப்பட்டது. இந்த ட்ரோன்கள் ரஷ்யாவால் தங்கள் நாட்டை தாக்கஅ அனுப்பப்பட்டதாக போலந்து கூறுகிறது. அதே நேரத்தில், ரஷ்யா இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
போலந்து மீது ட்ரோனை ஏவுவது குறித்து ரஷ்யா எந்த தெளிவான அறிக்கையையும் வெளியிடவில்லை. ஆனால் ட்ரோன் உக்ரைன் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அது போலந்தின் எல்லைக்குள் சென்றது. போலந்து உக்ரைனின் அண்டை நாடு. ரஷ்ய ட்ரோனை சுட்டு வீழ்த்த போலந்து எஃப்-35 ஐப் பயன்படுத்தியது.
இப்போது போலந்து அரச்ய் ட்ரோனின் சிதைவுகளைத் தேடி வருகிறது. அமெரிக்காவும், நேட்டோவும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. போலந்து பிரதமர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவிடம் பேசியுள்ளார். அப்போது ரூபியோ, அனைத்து விஷயங்களும் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
1939 ஆம் ஆண்டு போலந்து மீதான தாக்குதலுக்குப் பிறகு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அந்த நேரத்தில், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் முதல் முறையாக போலந்தைத் தாக்கினார். இந்த முறையும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வலுவாக உள்ளன. ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற முக்கிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக மிகவும் குரல் கொடுக்கின்றன. இந்நிலையில், போலந்து தாக்கப்பட்ட விதத்தில், இது உலகப் போருடன் டொடர்பு படுத்தப்படுகிறது. போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் அதை உலகப் போருக்கான ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார்.
நேட்டோ என்பது 32 நாடுகளை உள்ளடக்கிய ஒரு இராணுவ அமைப்பு. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி போன்ற முக்கிய நாடுகளும் அடங்கும். நேட்டோவின் பிரிவு-4 ன் படி, யாராவது ஏதேனும் நட்பு நாடுகளைத் தாக்கினால், அது குறித்து அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
நேட்டோவின் பிரிவு-5, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால், அது அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறுகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள்.