கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது; இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
வழக்கமாக அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கையைவிட கரூர் பரப்புரையின்போது அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு வருபவர்களுக்கான
எந்தவொரு அடிப்படை வசதிகளையும் தவெக செய்யவில்லை; தவெக தலைவர் சுமார் 7 மணி
நேரம் தாமதமாகவே கூட்டத்திற்கு வந்தார்.
கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது.
மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றபோது
தவெகவினர் ஆம்புலன்ஸ் வாகனங்களை தாக்கினர்.
உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும்.
கரூர் கூட்ட நெரிசல் போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி விரைந்து கையாண்டது.
சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும் கூட்டங்களால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
