“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நம்பிக்கை தரும் மங்கல வாழ்த்து.. இதோ, தை மாதம் பிறக்கப்போகிறது. நல்வழி பிறக்கப்போகிறது. மார்கழி மாதம் பக்தி மாதம். பக்தி மாதத்தின் பலன் தை மாதம் கைமேல் கிடைக்கும் என்றார்கள் பெரியவர்கள். அதனால்தான் தைமாதம் முதல் தேதியே புதுப்பானையில் பொங்கல்வைத்து, பால் பொங்கல் பொங்குவது போலவே, நம்முடைய மனதும் இல்லமும் பொங்க வேண்டும் என்று பொங்கலோ பொங்கல் என்று விண்ணதிர ஆரவாரத்தோடு குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
