அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், அவர்களின் மகன், மகளுக்கான திரு மணம் முன்பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.5.லட்சமாகவும் உயர்த்தப் பட்டது. இதற்கான அரசாணை ஜூனில் வெளியி டப்பட்டது.
இதையடுத்து கல்வித்து றையில் தீபாவளி முன்ப ணம் பெறுவதற்கு 95 சத வீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக் கீட்டை அரசு மேற்கொள் ளவில்லை. செப்., 22 வரை அதிகரிக்கப்பட்ட முன்ப ணத்திற்கான தொகை அரசு பள்ளிகளுக்கான கணக்கு எண்களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய் யப்படவில்லை. விண் ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு தீபாவளி முன் பணம் கிடைக்காத சூழல்ஏற்பட்டது.
விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக நிதித்துறை சார்பில் கருவூலம் மற்றும் கணக் குத்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று அரசு, உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) அனுப் பிய சுற்றறிக்கையில் ‘விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தீபா வளி முன்பணம் பெறு வதற்கான ‘பில்’ தயார் செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
