பசி என்றால் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. இங்கிருக்கும் உங்களைப் போன்றவன்தான்.
இன்றைய தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துச் சென்றுள்ள, கஜானாவை சுத்தமா துடைச்சு வச்சிட்டு போயிருக்க, தூக்க முடியாத சுமையை வைச்சிட்டு போயிருக்க நிலையில் தான் பொறுப்பை கையில் எடுத்திருக்கிறோம்.
உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும், எது எந்த இடத்தில் இருக்கு, எது இல்லை என்பது தெரியவரும்.
அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என்று இருக்கிறேன்.
தமிழ்நாடு அரசாங்கம் இந்த நிலைமையில் தான் இருக்கிறது என்பதை சொல்லிவிட்டு தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; தப்பு செய்யவும் விடமாட்டான்.
யாருக்காவது அப்படி எண்ணம் இருந்தால், இப்பவே அதை அழித்துவிடுங்கள்; ஒரே பவர் செண்டர், அது நான்தான்.
எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும்.
சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லார்க்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன்; மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழு கவனம் செலுத்துவேன்.
–முதலமைச்சர் விஜய்.
