தென்காசி: தென்காசி மாவட்டம், அய்யாபுரம், அருள்மிகு தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 32வது ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த அக்டோபர் 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னதாக 10 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இத்திருவிழாவில் பெருந்திரளான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 6வது தலைமுறையாக நடத்தி வரும் இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு மூன்று நாள் சிகர நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
