“நிறம்” படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கிருஷ்ண பலராம். இவர் தற்போது நடிகை பிரீத்தி அஸ்ராணியை வைத்து திரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முகேன் ராவ், தான்யா ஹோப் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் படமான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக விரைவில் வெளியாக இருக்கிறது.
படம் குறித்து பேசிய இயக்குனர் கிருஷ்ண பலராம், “பச்சோந்தி போல் மாறும் மனிதர்களின் பல்வேறு நிறங்களை குறிக்கும் வகையில் இப்படத்திற்கு நிறம் என்று பெயரிட்டு இருக்கிறோம். டி .இமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதை அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் என்பதால் பன்மொழி படமாக அகில இந்திய அளவில் உருவாக்கி இருக்கிறோம் அனைத்து மொழி ரசிகர்களும் படத்தை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
