திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் நிலக்கோட்டை, மிளகாய்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் மணி(27) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் மணிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மணியை கைது செய்து சிறையில் அடைக்க பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
