சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன். 26 வயதான இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் போடும் வேலை செய்து வந்தார் . நேற்று மாலையில் மணிமாறன் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகர் அருகே தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் சேர்கள் தயாரிக்கும் கம்பெனிக்குள் திருடுவதற்கு சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் மணிமாறனை மடக்கி பிடித்து இரும்பு கம்பம் ஒன்றில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். அவரது தலையை மொட்டை அடித்தும் சித்ரவதை செய்து உள்ளனர்.இதில் பலத்த காயம் அடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
