கரூர் விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை அவசர விசாரணைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் அசெளகரியங்கள் குறித்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் பேசியிருந்தார்.
இந்த உரைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடுத்தது. மேலும், இந்த விவகாரம் மிக முக்கியமானது என்பதால் வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு முறையீடு செய்யப்பட்டது.
திமுவவின் இந்த அவசர முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஜூலை 7-ஆம் தேதியான நாளை விசாரணை பட்டியலுக்கு மாற்றியுள்ளது. தவெக முதலமைச்சரின் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், அமைச்சர் ஒருவரின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்றிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவசர விசாரணையின் முடிவில் அமைச்சர் ஆதி அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரமும் உற்று நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.
