3 நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூன் 27) முதல் இன்று வரை செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மைனியை சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் யூபிஐ பணப் பரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு, Guardian of the Blue Horizon என்ற விருதை செஷல்ஸ் அதிபர் வழங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான அர்ப்பணிப்புக்கான உயரிய விருது இதுவாகும்.
விருதைப் பெற்ற பின்னர், தனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது இந்திய மக்களுக்கும், தனக்கும் பெருமை சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த விருதினை அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பிரதமர் பேசுகையில், “இரு நாடுகளும் தங்களின் தூதரக உறவுகளின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நேரத்தில் வழங்கப்படும் இந்த அங்கீகாரம், இரு நாடுகளின் நட்பை மேலும் வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்” என்று கூறினார்.
