ஆதார் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, வெறும் புகைப்படம் மற்றும் பாதுகாப்பான க்யூஆர் (QR) கோடு ஆகியவற்றை மட்டுமே கொண்ட புதிய வடிவமைப்பு முறையைக் கொண்டுவர இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றவர்களுக்கு எளிதில் தெரிவதைத் தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
